1."திங்களைப் போற்றுதும் திங்களைப் போற்றுதும்", "ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும்", "மாமழை போற்றுதும் மாமழை போற்றுதும்" - என்ற பாடலை இயற்றியவர்?
திருவள்ளுவர்
கம்பர்
இளங்கோவடிகள்
ஔவையார்
2.பொருத்துக.
திங்கள் - மகரந்தம்
கொங்கு - ஆணைச்சக்கரம்
அலர் - நிலவு
திகிரி - மலர்தல்
A) 4 3 1 2
B) 3 1 4 2
C) 1 2 4 3
D) 2 1 4 3
3.பொருத்துக.
பொற்கோட்டு - அச்சம் தரும் கடல்
மேரு - இமயமலை
நாமநீர் - பொன்மயமான சிகரத்தில்
அளி - கருணை
A) 3 2 1 4
B) 1 2 3 4
C) 4 3 2 1
D) 4 3 1 2
4.தேன் நிறைந்த ஆத்திமலர் மாலையை அணிந்தவன்?
சேரமன்னன்
சோழ மன்னன்
பாண்டிய மன்னன்
இவற்றில் எதுவுமில்லை
5.காவிரி ஆறு பாயும் நாடு?
பாண்டிய நாடு
சேர நாடு
சோழநாடு
இவற்றில் எதுவுமில்லை
6.பொன்போன்ற சிகரங்களையுடைய இமயமலையை கதிரவன் ------------ சுற்றிவருகிறது?
இடப்புறமாகச்
வலப்புறமாகச்
அ&ஆ
இவற்றில் எதுவுமில்லை
7.சிலப்பதிகாரத்தை இயற்றியவர்?
சீத்தலை சாத்தனார்
திருத்தக்க தேவர்
கம்பர்
இளங்கோவடிகள்
8.இளங்கோவடிகள் சேர மன்னர் மரபைச் சேர்ந்தவர் என்று ----------------- பதிகம் கூறுகிறது?
சிலப்பதிகாரம்
மணிமேகலை
சீவக சிந்தாமணி
குண்டலகேசி
9.இளங்கோவடிகள் நூற்றாண்டு?
கி.பி.12
கி.பி.2
கி.பி.8
கி.பி.5
10.முத்தமிழ்க் காப்பியம், குடிமக்கள் காப்பியம் எனப் போற்றப்படும் நூல்?
மணிமேகலை
சீவக சிந்தாமணி
சிலப்பதிகாரம்
குண்டலகேசி
11.இரட்டைக் காப்பியம் என அழைக்கப்படும் நூல்களில் ஒன்று?
சீவக சிந்தாமணி
குண்டலகேசி
வளையாபதி
சிலப்பதிகாரம்
12.கழுத்தில் சூடுவது -----------?
தார்
கணையாழி
தண்டை
மேகலை
13.கதிரவன் மற்றொரு பெயர் ------------?
புதன்
ஞாயிறு
சந்திரன்
செவ்வாய்
14.வெண்குடை என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது?
வெண்+குடை
வெப்+குடை
வெண்மை+குடை
வெம்மை+குடை
15.கொங்கு+அலர் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்?
கொங்குஅலர்
கொங்அலர்
கொங்கலர்
கொங்குலர்
16.பொற்கோட்டு என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது?
பொற்+கோட்டு
பொண்+கோட்டு
பொற்கோ+இட்டு
பொன்+கோட்டு
17.அவன்+அளிபோல் என்பதைச் சேர்த்து எழுதக் கிடைப்பது?
அவன்அளிபோல்
அவனளிபோல்
அவன்வளிபோல்
அவனாளிபோல்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக