1. பள்ளி விழா ஒன்றில் பங்கேற்க சென்ற காமராசர் நாடு முழுவதும் எத்தனை ஆயிரம் பள்ளிகள் திறக்க இருப்பதாக கூறினார்?
32,000
50.000
60,000
52,000
2. பொருத்துக.
ஆரம்பப்பள்ளி - மூன்று மைல் தூரம்
நடுநிலைப்பள்ளி - ஐந்து மைல் தூரம்
உயர்நிலைப் பள்ளி - ஒரு மைல் தூரம்
A) 1 2 3
B) 3 1 2
C) 3 2 1
3. காமராசர் எங்கு உள்ள தரைப்பாலத்தை காரணம் காட்டி மூன்று மைல் தூரத்திற்கு ஒரு பள்ளி என்ற விதியை தளர்த்த ஏற்பாடு செய்வதாக கூறினார்?
மேலக்குடி
மேட்டுக்குடி
கும்முடிபூண்டி
பரமக்குடி
4. கல்விக் கண் திறந்த காமராசர் என்று மனதாரப் பாராட்டியவர் யார்?
அண்ணா
காந்தி
பெரியார்
அம்பேத்கர்
5. காமராசர் சிறப்புப் பெயர்களுள் பொருந்தாது?
கருப்புக் காந்தி
எல்லை காந்தி
படிக்காத மேதை
ஏழைப்பங்காளர்
6. காமராசர் முதல் அமைச்சராகப் பதவியேற்ற நேரத்தில் ஏறக்குறைய ----------- தொடக்கப் பள்ளிகள் மூடப்பட்டு இருந்தன?
6,000
3,000
5,000
4,000
7. மாநிலம் முழுக்க அனைவருக்கும் இலவசக் கட்டாயக் கல்விக்கான சட்டத்தை இயற்றித் தீவிரமாக நடைமுறைப் படுத்தியவர்?
பெரியார்
அம்பேத்கர்
காமராசர்
அண்ணா
8. மாணவர்கள் பசியின்றிப் படிக்க மதிய உணவுத் திட்டத்தை கொண்டு வந்தவர்?
எம்.ஜி.ஆர்
காமராசர்
கருணாநிதி
அண்ணா
9. பள்ளிகளில் ஏற்றத்தாழ்வின்றிக் குழந்தைகள் கல்வி கற்கச் சீருடைத் திட்டத்தை அறிமுகப்படுத்தியவர்?
காமராசர்
ஜெயலலிதா
கருணாநிதி
அண்ணா
10. பள்ளிச்சீரமைப்பு மாநாடு, தமிழ்நாட்டில் பல கிளை நூலகங்கள், மாணவர்கள் உயர்கல்வி பெறப் பொறியியல் கல்லூரி, மருத்துவக் கல்லூரி, கால்நடை மருத்துவக் கல்லூரி, ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் ஆகியவற்றை புதிதாகத் தொடங்கிக் கல்விப் புரட்சிக்கு வித்திட்டவர்?
பெரியார்
காமராசர்
அண்ணா
ராஜாஜி
11. தமிழ்நாட்டில் காமராஜர் பல்கலைக்கழகம் எங்கு உள்ளது?
தஞ்சாவூர்
சென்னை
மதுரை
திருச்சி
12. நடுவன் அரசு காமராசருக்கு பாரத ரத்னா விருது வழங்கிய ஆண்டு?
1971
1976
1978
1990
13. காமராசர் வாழ்ந்த ---------- மற்றும் ---------- இல்லங்கள் அரசுடமையாக்கப்பட்டு நினைவு இல்லங்களாக மாற்றப்பட்டன?
சென்னை மற்றும் விருதுநகர்
கோவை மற்றும் விருதுநகர்
விருதுநகர் மற்றும் கோவை
சென்னை மற்றும் கோவை
14. எங்கு உள்ள உள்நாட்டு விமானநிலையத்திற்கு காமராசர் பெயர் சூட்டப்பட்டுள்ளது?
மதுரை
கோவை
திருச்சி
சென்னை
15. காமராசருக்கு சென்னையில் சிலை நிறுவப்பட்ட இடம்?
கிண்டி
ராயப்பேட்டை
மெரினா கடற்கரை
மாயவரம்
16. காமராசருக்கு மணிமண்டபம் உள்ள இடம்?
தூத்துக்குடி (அக்டோபர் 2 2000)
கன்னியாகுமரி (அக்டோபர் 2 2000)
நாகப்பட்டினம் (அக்டோபர் 2 2000)
திருவாரூர் (அக்டோபர் 2 2000)
17. பள்ளிக்கூடம் செல்லாததற்கு ஆடுமேய்க்கும் சிறுவர்கள் கூறிய காரணம்?
ஆடு மேய்க்க ஆள் இல்லை
ஊரில் பள்ளிக்கூடம் இல்லை
வழி தெரியவில்லை
பேருந்து வசதி இல்லை
18. பசியின்றி என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது?
பசி+யின்றி
பசு+யின்றி
பசி+இன்றி
பசு+இன்றி
19. படிப்பறிவு என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது?
படி+அறிவு
படிப்பு+அறிவு
படி+வறிவு
படிப்பு+வறிவு
20.காடு+ஆறு என்பதைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்?
காடுஆறு
காட்டுஆறு
காடாறு
காட்டாறு
நன்றி
பதிலளிநீக்கு