1. திருக்குறளில் கூறப்பட்டுள்ள "அகர முதல எழுத்தெல்லாம்" இதில் 'அகரம்' எதற்கு தொடக்கம்?
எழுத்து
சொல்
பொருள்
யாப்பு
2. திருக்குறளில் கூறப்பட்டுள்ள "ஆதி பகவன் முதற்றே உலகு" இதில் 'ஆதி பகவன்' எதற்கு தொடக்கம்?
உலகம்
நாடு
இயற்கை
இறைவன்
3. மழை உரியகாலத்தில் பெய்யாது போனால் உலகத்து உயிர்களை எல்லாம் ------------- துன்புறுத்தும்?
இயற்கை
மழை
பசி
தூக்கம்
4. உரிய காலத்தில் எது கெடுப்பதும், காப்பதுமாக இருக்கிறது?
காற்று
நிலம்
வானம்
மழை
5. முடியாத செயலை முடித்துக் காட்டுபவர் யார்?
சிறியோர்
பெரியோர்
இளைஞர்கள்
குழந்தைகள்
6. மக்களுக்கு மகிழ்ச்சி தருவது -------?
தூக்கம் இன்மை
வன்சொல்
அறிவுடைய மக்கள்
சிறிய செயல்
7. தன் பிள்ளையை பெற்றெடுத்த மகிழ்ச்சியைவிட எது தாய்க்கு பெருமகிழ்ச்சி தருகிறது என்று திருவள்ளுவர் கூறுகிறார்?
இகழ்
புகழ்
வெற்றி
தோல்வி
8. பொருத்துக.
அன்பு இல்லாதவர் - தம் உடலும் பிறர்க்கே என்பர்
அன்பு உடையவர் - எல்லாப் பொருளும் எனக்கே என்பர்
உயிருள்ள உடல் - எலும்பும் தோலும்
உயிரற்ற உடல் - அன்பு
A) 2 1 4 3
B) 2 1 3 4
C) 2 3 1 4
D) 2 3 4 1
9. ஒருவருக்கு சிறந்த அணி எது?
அன்பும், அறனும்
அறிவும், ஆற்றலும்
பணிவும், இன்சொல்லும்
இன்சொல்லும் வன்சொல்லும்
10. இனியசொல் இருக்கும்போது இன்னாச்சொல் பேசுவது கனி இருக்கும்போது ------- உண்பதைப் போன்றது?
கனி
காய்
இனிப்பு
கசப்பு
11. திருவள்ளுவர் -------------ஆண்டுகளுக்கு முற்பட்டவர்?
மூவாயிரம்
நாலாயிரம்
இரண்டாயிரம்
எட்டாயிரம்
12. 2016ஆம் ஆண்டு ரியோ நகரில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான பாரா ஒலிம்பிக் போட்டியில் உயரம் தாண்டுதலில் தங்கப் பதக்கம் வென்றவர்?
தங்கவேல் மணிவண்ணன்
தங்கவேல் மாரியப்பன்
தங்கவேல் மணிகண்டன்
மாரியப்பன் தங்கவேல்
13. என் மகனின் வெற்றி எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. அவனைப் பெற்ற பொழுதைவிட இப்போது தான் அதிகமாக மகிழ்கிறேன் என்றவர்?
மாரியப்பன் அண்ணன்
மாரியப்பன் தம்பி
மாரியப்பன் தந்தை
மாரியப்பன் தாய்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக